திருப்பத்தூர்:டிச:28, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவினை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் A. சரவணன் தலைமை வகித்தார். S.சிவக்குமார், V.மாதேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேமுதிக மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் I.ஆஞ்சி, மாவட்ட கவுன்சிலர் A. பயாஸ் பாஷா, மாவட்ட துணை செயலாளர் C.S. சரவணன், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் மதன்ராஜ், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி
மாவட்ட கழக செயலாளர் பேசுகையில்: இந்திய தேசமே போற்றி பாராட்டிய மகத்துவமான தலைவர் கேப்டன் அவர்கள், திரைத்துறையில் மட்டும் அல்லாமல் மக்களுக்காகவும் போராடி சாதனைகளை படைத்தவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தது மிகவும் வேதனைக்குரியது. தமிழக மக்களுக்காக அவர் செய்த தியாகம் கணக்கில் அடங்காது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குறிக்கோள்களை அவர் விட்டுச் சென்ற பணிகளை தலைவர் பிரேமலதா, அவர்களின் பிள்ளைகள், அண்ணன் சுதீஷ் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் கேப்டன் அவர்களின் குருபூஜை விழாவினை சிறப்பாக நடத்தி வரும் நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலும் இவ்விழா சிறப்பாக நடத்தி வருகிறோம். ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கு கொண்டு எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார். முன்னதாக இவ்விழாவில் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பெருமாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் திருப்பத்தூர் ஒன்றிய துணை செயலாளர் V. சிவக்குமார், மாதையன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் குருபூஜை நிகழ்வுகளை நடத்தி அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அந்த பகுதிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.