வேலூர்=25
வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேரூந்து நிலையம், நகர அரங்கம் அருகே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் பணிகள் துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், 2 வது மண்டல குழுத்தலைவர் நரேந்திரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, மாவட்ட திட்ட அலுவலர் செல்வி சாந்திபிரியதர்ஷினி, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.