நாகர்கோவில், செப். 15 –
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு பாரத நாடு அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் பொருளாதார வேகமாக முன்னேறி உள்ளது. நாட்டில் 14 விதமான வரிகள் விதிக்கப்பட்ட நிலையில் அதனை ஒன்றிணைத்து 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டது. இதில் 5 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிப்புகள் இருந்த நிலையில் தற்போது நிலை மாற்றி நேரடியாக 5 மற்றும் 15 சதவீதம் வரிக்குறைப்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்கள் விலை குறையும்.
உயிர் காக்கும் மருந்துகள் உள்பட பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டுள்ளது. இது ஏழை மற்றும் சமானிய மக்கள் பல மடங்கு பயனடைவார்கள். பா.ஜனதா அரசின் ஆட்சியில் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 10 லட்சம் தொழிலாளர்கள் மறைமுக நேரடியாகவும் திருப்பூரில் நடைபெறும் தொழிலை நம்பி உள்ளார்கள். தமிழகம் முழுவதும் மீனவ 608 கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் பசுமை ஆற்றல் மூலம் 34 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நாம் தயாரிக்கிறோம். இந்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பு சாமானிய மற்றும் விவசாயிகளுக்கு வரப்பிரசதமாகும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அத்தியாவசிய பொருட்கள் மாதம் ரூ.2000 ரூபாய்க்கு வாங்கினால் அதில் நாம் இந்த வரி குறைப்பு மூலம் 250 மிச்சமாகும்.
விஜய்க்கு கூடும் கூட்டங்கள் குறித்து கேள்வி கேட்கிறீர்கள். அந்த கூட்டமானது எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தபடியாக விஜய்க்கு உள்ளது. மக்களை பற்றி கவலை இல்லாமல் ஆட்சி செய்தது காங்கிரஸ். ட்ரம்பின் கைக்கூலி ராகுல் காந்தி என்று சொல்லலாமா?. உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்தியா உயர்ந்துள்ளது. இது சில நாட்டின் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா என்றும் உலக நாடுகளுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால் யாருக்கும் அடிபணிந்து மண்டியிடும் நிலைபாடு எப்போதும் இந்தியாவிற்கு கிடையாது என்பதில் பிரதமர் மோடியாக உறுதியாக உள்ளார்.
கன்னியாகுமரி கடலின் நடுவில் உள்ள கண்ணாடி பாலத்தில் மாதம் ஒருமுறை பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் அது பற்றிய தெளிவான விளக்கங்கள் யாரும் அளிப்பதில்லை. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது பா.ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார். அண்ணாமலை மீது கட்சி நிர்வாகி தெரிவித்த புகார் என்பது பொது பிரச்சினை அல்ல அது தனிப்பட்ட பிரச்சினையாகும். அது அரசியலக்குவது பயனில்லை. இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின் போது எம் ஆர் காந்தி எம்எல்ஏ, பாஜ நிர்வாகிகள் மீனா தேவ், சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



