தென்தாமரைகுளம்., ஏப். 30
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர். தர்மரஜினி , “ஆராய்ச்சி” பிரிவில் சிறப்பான சாதனைக்கு தேசிய உலகளாவிய விருதை பெற்றார்.
இந்த விருது, கல்வித்துறையில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பை கவுரவிக்கும் விதமாக வழங்கப் பட்டுள்ளது.
22 ஆண்டுகள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஆர். தர்மரஜினி வணிகவியல்துறை தலைவராக உள்ளார். சாமித்தோப்பு அன்புவனம் நிர்வாகியாகவும் உள்ளார்.