ஆத்தூர்
சித்தையன்கோட்டையில் வையை குழு சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே, சித்தையன்கோட்டையில் நடைபெற்ற, இயற்கை விவசாய பரப்புரை கூட்டம் மற்றும் வையை குழு சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழாவில் ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
அதில், வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கோபிகா, ஹர்சபாரதி, ஜமுனா, ஜனனி, ஜெயஸ்ரீ விவேகா, கனிமொழி, ஆகியோர்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்கள், இனக்கவர்ச்சி பொறி, நீல ஓட்டும் பொறி, மஞ்சள் ஒட்டும் பொறி, மண்புழு உரம், அமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம், இ.எம்.கரைசல் , கோமியம், பஞ்சகவ்யம் போன்றவற்றை காட்சி படுத்தினார்கள். மற்றும்
பாரம்பரிய அரிசி வகைகள் பற்றிய கூடுதல் தகவல் பற்றி கூறினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.