நாகர்கோவில், நவ. 10 –
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அமைந்துள்ள டாட்டா தனிஷ்க் ஜூவல்வரியில் தங்க நகை எக்ஸ்சேஞ் திட்டம் நீட்டிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு டெரிக் குருப் நிர்வாக இயக்குநர் ஸ்டாலின் மற்றும் டெரிக் குருப் இயக்குநர் டெரிக் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
இதுபற்றி நிர்வாக இயக்குநர் ஸ்டாலின் கூறும்போது: நமது நாட்டில் 99 சதவீதம் தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அந்நிய செலவாணி வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக டாட்டா தனிஷ்க் நிறுவனம் பொதுமக்கள் வைத்துள்ள பழைய தங்கத்தை முழு மதிப்பில் எடுத்துக்கொள்கிறோம். 9 காரட் முதல் 22 காரட் வரை உள்ள பழைய தங்கத்தை எந்த கடையில் வாங்கியிருந்தாலும் எந்தவித பிடித்தமும் இன்றி அன்றைய காரட் என்ன விலையோ அதே விலையில் எடுத்துக்கொள்ளப்படும்.
இங்குள்ள காரட் மதிப்பு அளவிடும் எந்திரத்தில் தங்கத்தின் தூய்மையை வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த திட்டம் 2025 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தங்க நகைகள் வாங்கும்போது சிறப்புத் தள்ளுபடியும் உள்ளது. இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் பலரும், கடை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.



