சுசீந்திரம்.ஏப்.6
சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் பால்துரை வயது 75, இவர் தனது கசாப்பு (கறி) கடைக்காக ரூபாய் 8000 மதிப்பிலான ஆடு விலைக்கு வாங்கி வீட்டின் பின்புறம் கட்டி இருந்தார். அதனை சம்பவத்தன்று யாரோ திருடி சென்று விட்டனர்.
இது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சி.சி .டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 2 பேர் ஆட்டை திருடிக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் பால்துரை புகார் செய்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


