திருப்பூர், மே., 15
திருப்பூர் மாநரில் குற்றசம்பவங்களை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பல்வேறு வழிகாட்டுத்களை போலீசாருக்கு வழங்கி வருகிறார் அந்த வகையில் திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்துவருகின்றனர்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதிலும் திருப்பூர் மாநகர போலீசார் தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒருபகுதியாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார் அதன்படி திருப்பூர் மாநகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் குழுக்கள் வாகசோதனை என்ற பெயரில் ஆங்காங்கே முக்கிய சிக்னல்கள் பஸ் ஸ்டேண்ட் உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் நின்றுகொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட டார்க்கெட்டை நிறைவு செய்யும் வேகத்தில் அந்தவழியாக வரும் அப்பாவிகளை மடக்கி பிடித்து சோதனைசெய்வதாக காட்டிக்கொண்டு ஏதோ ஒரு காரணத்தை காட்டி அபராதம் விதிப்பதும் கையில் பணம் இல்லை என்பவர்கள் மீது வழக்கு தொடுப்படும் கையில் பணம் இருக்கும் அப்பாவிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்குப்போடாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பாதிப்பிற்குள்ளான வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தவிர வாகன ஓட்டிகளிடம் மரியாதை குறைவாக போலீசார் பேசுவதும் தொடர்கதையாகி வருவதாக கூறும் வாகன ஓட்டிகள் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் ஏதோ டார்கெட்டை முடிக்கும் வரை குறிப்பிட்ட இடத்தில் வாகன சோதனை நடத்திவிட்டு டார்கெட் முடிந்ததும் வாகன ஓட்டிகளை கண்டும் காணாமல் அலட்சியமாக விட்டுவிடுவதாவும் குற்றம் சாட்டுகின்றனர்.