சங்கரன்கோவிலில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் பகுதியைச் சார்ந்த த வெ க கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் திமுகவில் இணைத்துக் கொண்ட அவர்களை கழகத்தில் தீவிர பணியாற்ற வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கேட்டுக் கொண்டார் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோ ர் கலந்து கொண்டனர்