By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது

Last updated: December 23, 2025 6:36 pm
December 23, 2025
5 Views
Share
SHARE

திங்கள்நகர், டிச. 23 –

திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலக்குளம் சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே மார்ஷல் நேசமணி பூங்கா உள்ளது.  பூங்காவை ஒட்டி சந்தையும் இருப்பதால் இந்த பூங்காவை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் புதர்கள் மண்டி கிடந்ததால் பூங்காவை புனரமைக்க திங்கள்நகர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக அம்ரூத் 2.0  2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பூங்கா மேம்பாடு செய்யும் பணி நடந்தது.
‎
‎கேரளா கட்டிட வடிவமைப்பு கொண்ட நுழைவு வாயில், விளையாடும் மற்றும் அமர்ந்து இருப்பவர்களை வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் அலங்கார இரும்பு கிரில் வடிவமைப்புடன் காம்பவுண்ட், வண்ண இன்டர்லாக் நடைபாதை, கல் பெஞ்சுகள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சீசா என விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பூங்கா மேம்படுத்தப்பட்டது.
‎
‎இதனிடையே பூங்காவை கார்டன் போன்று கூடுதல் அழகுபடுத்த அழகு செடிகள், புற்கள், கொடிகள், மரங்கள் நடுவது, அழகிய ஓவியங்கள் வரைவது, தண்ணீர் பீச்சி அடிக்க குழாய்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ. 16 லட்சம் தனியார் பங்களிப்பை பெற்று 22 ஈச்ச மரங்கள், பூத்து குலுங்கும் அழகிய செடிகள், கொடிகள், மூங்கில், கனி கொன்னை என அழகு மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது. கொடிகள் படர இரும்பு கம்பிகளால் ஆன 3 பந்தல்கள், சுவர் ஓவியங்கள், அங்குள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியும் இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடி வர்ணம் பூசப்பட்டு இரவு பூங்கா ஜொலிக்கும் வகையில்  அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட்டது.
‎
‎இதையடுத்து புனரமைக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ஜேக்கப் வரவேற்றார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாண்டியராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பிரின்ஸ் எம்எல்ஏ பூங்காவை திறந்து வைத்தார். கவுன்சிலர் செல்வின் ஜார்ஜ் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் பூங்காவை அழகு படுத்த நன்கொடை வழங்கிய தனியார் நிறுவனத்தினர் கவுரவப் படுத்தப்பட்டனர். துணைத் தலைவர் ரீத்தம்மாள், கவுன்சிலர்கள் சாந்தா, சுகன்யா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
‎
‎

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

August 26, 2024
38 Views
கோட்டார் வேத நகரில் ரூ.14.50 லட்சத்தில் புதிய நூலகம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
குடியாத்தம் NSK நகர் வாசிகள் வட்டாட்சியரிடம் மனு
பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account