தேனி ஆகஸ்ட் 20:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது இந்த கூட்டத்தில் சமூகப் பாதுகாப்பு மற்றும் சார்பில் பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா வழங்கினார் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என்று மொத்தம் 320 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜெயபாரதி தனித் துணை ஆட்சியர் முரளி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி ஒருங்கிணைத்தார்