சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை ஊராட்சிக்கு உட்பட்ட வலசை கிராமத்தில் உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நியாய விலை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை,
மாவட்ட பிரதிநிதி ராஜகுலராமர்பாண்டியன்,
சாயமலை ஊராட்சி மன்ற தலைவர் முருகன்,ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி கண்ணன், களப்பாளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணிஅமைப்பாளர் அழகுதுரை,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில்நாதன், கே.கோவில்பட்டி கிளை செயலாளர்
முத்துராமலிங்கம், வலசை கிளை செயலாளர் செல்லச்சாமி, ஊர் நாட்டாமைகள்
ரஞ்சித், உடையதுரை, மாவட்ட மாணவரணி வீரமணி, ஜெயக்குமார், பாலாஜி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



