நாகர்கோவில் மார்ச் 5
திருவட்டார் செருப்பாலூர் பகுதியை சேர்ந்த இரு பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கப்பட்டது.
புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் படி, தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் 100க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து, மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் 48 மணி நேரத்தில் சென்னையில் வைத்து இரு குழந்தைகளையும் கண்டுபிடித்து மீட்டனர்.
வேகமாக செயல்பட்டு இரு மாணவிகளையும் மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.