தென்காசி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அணியின் ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் உள்ள வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் நாகூர் கனி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதியை தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், சிறுபான்மையினர் அணி சார்பில் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனவும், 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அணி சார்பில் புதிய பவள விழா கொடிக்கம்பங்கள் அமைத்து கழக கொடி ஏற்ற வேண்டும் எனவும் ,கிறிஸ்தவர் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அணியின் சார்பில் பெற்று தர வேண்டும் எனவும், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் பெற்றுத் தர வேண்டும் எனவும் வரும் , 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்ட கழகத்தின் ஆலோசனையின் படி தேர்தல் பணி ஆற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அணி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics