கோவை மே:27
கோவை மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக,மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளம் பகுதிகளில், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை,
தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.
வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை மாநகராட்சி மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் கழக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.