திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் இணைப்புச் சங்க தலைவர்கள்
கலந்து ஆலோசனை
கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஒன்றியம் அலுவலகம்
தானைத் தலைவர் சிவ. இளங்கோ அரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
ஐ.பெரியசாமி ,
பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார்,
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ,அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர் ஐ. பெரியசாமி பெற்று கொண்டு கனிவுடன் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என தெரிவித்தார்கள்.