திருவாரூர் ஜனவரி 28
திருவாரூரில் நடைபெற்ற டிராக்டர் பேரணிக்கு தலைமையற்ற SKM (NP)தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சம்யுக்த்த கிசான் மோச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் கொண்டுவந்து
ஜக்ஜித்சிங் டல்லே வால் உயிரை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தி குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்த வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்டஇடங்களில் டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
மன்னார்குடியில் துவங்கி திருவாரூரில் முடிவுற்ற பேரணியில் 62க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்
40 கிமீ தூரம் பங்கேற்றுள்ளன.
சம்புக்த்த கிசான் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் டல்லேவால் 62 நாட்களைக் கடந்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் மெலிந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு வரும் 14ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்துள்ளது. மத்திய அரசின் உயர் அதிகாரிகள் வலியுறுத்தியதை ஏற்று மருத்துவ சிகிச்சைக்கு டல்லேவால் அனுமதித்துள்ளார்.
அதே நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரும் வரை தொடரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவும்,
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறவும்
விவசாயிகள் தற்கொலையிலிருந்து பாதுகாப்பதற்கு கடன் முழுமையும் தள்ளுபடி செய்யவும் வேண்டும் என கடிதம் எழுதி வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் உணர்வுக்கு முதலமைச்சர் மதிப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பல ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று உள்ளனர். பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பேரணியில் திருவாரூர் மாவட்ட தலைவர்
எம் சுப்பையன், செயலாளர் குடவாசல் சரவணன், மாநில துணைச் செயலாளர் எம் செந்தில் குமார், மாவட்டத் துணைத் தலைவர்
எம் கோவிந்தராஜ், துணை செயலாளர் பொ.முகேஷ் உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.