நாகர்கோவில் ஜூலை 10
கன்னியாகுமரி மாவட்டம். திருவட்டார் வட்டம். குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மினி விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலாக அரசு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தின்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டபேரவை விதி 110-கீழ் அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், கல்லடிமாமூடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்துக்கு ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சமும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரசு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணியினை முதலமைச்சர் சென்னை தலைமை
செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கடந்த 19.10.2023 துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். ஆனால் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை தவிர வேறு விளையாட்டு அரங்கம்
இல்லை. இதனை கருத்தில் கொண்டு கல்லாடிமாமூடு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைந்து தொடங்கி விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குளச்சல் பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.