தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளராக தாபா சிவாவை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததை அடுத்து விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் தருமபுரிக்கு வருகை தந்த போது கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட எல்லையான தெப்பூரில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் யூத் தேவா, இனை செயலாளர் ஈஸ்வர பிரகாஷ், பொருளாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் தொப்பூர் சுங்க சாவடி அருகே வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் இலக்கியம்பட்டியில் ஒன்றிய கழக சார்பில் சாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. செந்தில், வெங்கடேசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர். அம்பேத்கர் சிலை, பேரறிஞர் அண்ணா சிலை, தந்தை பெரியார் சிலை, கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார் .அவருக்கு கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது கட்சியின் தலைவர் எனக்கு மாவட்ட பொறுப்பை கொடுத்துள்ளார். கட்சி பணியை சிறப்பாக செய்வேன் என்றும் வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் வென்று தலைவருக்கு காணிக்கையாக செலுத்துவோம். மக்கள் பிரச்சனைக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இனை செயலாளர் வீரமணி, பொருளாளர் கோபி, துணைச் செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் தாரணி, நந்தினி மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics