தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின்,தொழிலாளர் முன்னேற்ற சங்கம்உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.ரதி தலைமை வகித்தார் நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார் மாவட்ட நிர்வாகிகள் எம்.ஈஸ்வரி, முருகம்மாள்,எம். மலர்கொடி, எண். செல்வி, ஆர். புனிதா,புஷ்பா ஆகியோர்முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் வே.வேலுச்சாமி கலந்து கொண்டு பேசினார். இதில் தர்மபுரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் செயலாளர் சண்முகராஜன், தலைவர் அன்புமணி, நகராட்சி துணைத்தலைவர் நித்திய அன்பழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், முத்துலட்சுமி தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் பிரச்சார செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சங்கத்தின் மாநில பொருளாளர் நா.கோமளா, மாநிலத் துணைத் தலைவர் அ.விமலா, தர்மபுரி மாவட்ட இலக்கிய அணி பொன் மகேஸ்வரன்,நன்றி உரை ஏ. புனிதா மற்றும் 200 அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டனர்.



