தருமபுரி மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர். இதில் மாநில பாதுகாப்பு குழு தலைவர் மாதையன், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் சேதுபதி, பொருளாளர் கோபி, சேலம் மண்டல தலைவர் நேசமுடன் நேதாஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள், தருமபுரி மேற்கு, கிழக்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.



