மதுரை ஏப்ரல் 22
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர். டாக்டர் கா.சண்முகசுந்தர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்
மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in क्र कनाल क விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வரும் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.