கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கொன்சேகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விநாயகா பல்தொழில்நுட்ப கல்லூரி, பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, PSV பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 6T60T மொத்தம் 7 கல்லூரிகளில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 841 தேர்வர்களில் 636 மருத்துவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.