மயிலாடுதுறை மாணவர் சாதனை. மாணவன் மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் சில்வர் ஜூப்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய்ராம். இவர் கடந்த நான்கு வருடங்களாக மன எண் கணித பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில் டெல்லி யுனிவர்சிட்டி சார்பில் சர்வதேச மன எண் கணித போட்டி நடைபெற்றது.
உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 6000 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், எட்டு நிமிடத்தில் 200 மனக்கணக்குகளுக்கு விடை அளிக்க வேண்டிய இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 160 வினாக்களுக்கு விடை அளித்து மாணவர் சஞ்சய்ராம் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த மாணவர் சஞ்சய்ராம் அவரது பெற்றோர்கள் வினோத்குமார், விஜயலட்சுமி ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மோகன்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் முதல்வர் ராஜ்குமார் துணை முதல்வர் புகழேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மாணவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.