கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட மாவீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட மாவீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது 255வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவில் பட்டி வருவாய் கோட்டாட்சியர். க. மகாலட்சுமி, ஓட்டபிடாரம் தாசில்தார் அனந்த், ஆகியோர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், அரசு துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனார், தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாவீரன் சுந்தரலிங்கம் அவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், சுதந்திரப் போராட்ட மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுதாரர் சூரிய லட்சுமி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
கவர்னகிரியில் மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics