தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் தமிழ்நாடு அரசையும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது .கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் முழுமையாக பாதிப்படைவார்கள் அதனால் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் எண்ணத்தை தமிழ்நாடு அரசும் தென்காசி மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு பழைய குற்றாலம் அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க கூடாது என்ற கோரிக்கை மனுவினை அஇஅதிமுக வின் சார்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் வழங்கினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ,தென்காசி நகர செயலாளர் சுடலை, சண்முகசுந்தரம், சிவானந்த் மற்றும் அஇஅதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics