தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோர்களால் கானொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்ட, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழாவினை தொடர்ந்து, சிவகங்கை பகுதிக்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று சிறப்பித்தார். சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



