தஞ்சாவூர் ஜூன் 24
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்க அளிக்க கோரி தஞ்சாவூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது .ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் சின்னை .பாண்டியன் தலைமை தாங்கினார் ,மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அழிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசு நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண் டும் .நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக் கான தேர்வுகள் அதற்கான வழிமு றைகள் ஆகியவற்றை சம்பந்தப் பட்ட மாநிலங்களே தேர்ந்தெடுத்து க் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் வலியுறுத்தப்பட்டன
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர் இதில் செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன் பக்கிரிசாமி ஜெயபால் செந்தில்குமார் கண்ணன், சுரேஷ் குமார், தமிழ்ச்செல்வி, திமுக மாநகர செயலாளர் சண்.ராமநாதன் நிர்வாகிகள் மேத்தா, சதாசிவம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி ஜி ராஜேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் முத்து உத்திராபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.