மார்த்தாண்டம் அக் 17
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 13 நாள்களாக நடைபெற்ற பணியானது நிறைவடைந்ததையடுத்து, போக்குவரத்துக்கு தொடங்கியது.
மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பம்மம் முதல் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலம் வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு இரும்புத் தூண்களாலான மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன்வழியே வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், நாள்தோறும் அதிக பாரத்துடன் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்றுவந்ததால், 2 வது முறையாக கடந்த 2 ம் தேதி இப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அதையடுத்து, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பழுதான பகுதியில் ரசாயனம் கலக்கப்பட்ட உயா்தர சிமென்ட் கலவை மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலிருந்து காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. புதன்கிழமைமுதல் பேருந்துகள் அனுமதிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா். மேம்பாலம் வழியாக கனரக லாரிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் இரவில் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் நிலையில், இப்பாலம் வழியாக அவை செல்லாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.