கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் குற்றம் சம்மந்தமாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெண் காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட
எட்டு நபர்களை கண்டறிந்து 17.08.2024 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சிவா என்ற சிவராமனை நேற்று அதிகாலை நேரத்தில்
காவல் துறையினர் பிடிக்க முற்பட்ட போது தப்பி ஓட முயற்சித்து அவர் தவறி கீழே விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ள.
அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.