சென்னை, ஜன- 12 ,
தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க தமிழகம் முழுவதும் கால்நடைக்கு மேய்ச்சல் நிலம் தேவை, நவீன மாட்டுத் தொழுவம் தேவை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் தங்க. சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திருநின்றியூர் தீனதயாளன், மாநில பொருளாளர் திருநீர்மலை கார்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழக முழுவதும் உள்ள கால்நடை மேய்ச்சல் நிலங்களை மீட்டு தர வேண்டும் , தமிழகம் முழுவதும் கால்நடை விவசாயிகளை கணக்கெடுத்து நவீனமாட்டு தொழுவம் அமைத்து தர வேண்டும், கால்நடைகளை பிடிக்கும் போது அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் .
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், மாட்டு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும், கால்நடை விவசாயிகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து
மாநிலத் தலைவர் வழக்கறிஞர் தங்க. சாந்தகுமார் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
மேலும் கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் பாண்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.