வேலூர்=20
கீழ்மின்னல் மதுரா இரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் 30 ஆம் ஆண்டு அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த பெருவிழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவும் அர்ஜுனன் தபசும் நாடகமும் இதனைத் தொடர்ந்து துரியோதனன் படுக்களம் மற்றும் தீமிதி திருவிழாவும் நடைபெற்றதை தொடர்ந்து தருமர் பட்டாபிஷேக விழாவும் வெகு விமரிசியாக நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள், பக்தர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.