மதுரை டிசம்பர் 12,
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மத்திய சிறையில் உள்ள இல்ல வாசிகளின் நலனுக்காக பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிரிசினர்ஸ் ஹோப் மினிஸ்ட்ரி ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்தின் மூலம் கிறிஸ்டியன் பெலோசிப் மருத்துவமனை ஒட்டன்சத்திரம் மற்றும் கிறிஸ்டியன் மருத்துவமனை அம்பிளிக்கை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு, காது, தோல், பல், மற்றும் பொது மருத்துவத்தை சார்ந்த 7 மருத்துவர்களும், 11 மருத்துவ பணியாளர்களும் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாமினை மதுரை சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் த.பழனி தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மு.சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் 200 சிறைவாசிகளும், 11 சிறைப்பணியாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் பிரிசினர்ஸ் ஹோப் மினிஸ்ட்ரி ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பாக இயக்குனர் கே .எம் .ரெஜி சாமுவேல் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக 2-சக்கர நாற்காலிகளை வழங்கினார்.