மதுரை ஜூன் 26,
மதுரை அழகர் கோவில் சுந்தரராசா பள்ளி சாதனை
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள், தென்னிந்திய அளவில் எச். சி. எல். நிறுவனம் சார்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட கைபந்து போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு எச். சி. எல். அணிக்கு அழகர் கோவில் சுந்தர்ராசா உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில அணிகளுடன் தமிழ்நாடு அணிக்காக விளையாடி 2-ம் இடம் பெற்று வெற்றி கோப்பையும், சான்றிதழ்களும் பெற்றுள்ளனர். மேலும் முதல் 2 இடங்களை பெற்ற அணிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் கைப்பந்து போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் மற்றும் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் இந்த மாணவிகளை தலைமை ஆசிரியர் செல்வராஜ், பள்ளிச் செயலரும் துணை ஆணையருமான கலைவாணன் மற்றும் மண்டல இணை ஆணையர் செல்லதுரை ஆகியோர் பாராட்டினர்.