கோவை ஏப்: 25
பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியின் தமிழ் இலக்கியத்துறை சார்பில் பேராசிரியர் மு. காமராஜ் எழுதிய தாலாட்டு தாய்மடி என்ற சிறார் இலக்கிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. மாணிக்கச் செழியன் நூலை வெளியிட்டுத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி கல்வி ஆலோசகர், கொலுசு பல்சுவை மாத இதழ் ஆசிரியர் மு. அறவொளி அவர்கள் நூலைப் பெற்று சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் இந்நூலில் இன்றைய குழந்தைகளின் வாழ்வியலைக் கருத்தில் கொண்டு எளிமையான நடையில் பயனுள்ள கருத்துகளை முன்வைத்து அமைந்திருக்கிறது என்றார்.
தமிழ்த்துறை தலைவர்கள் முனைவர் பே. மஹேஸ்வரி மற்றும் முனைவர் த. பரமேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் த.புஷ்பராணி வரவேற்புரை வழங்கினார்.
நிறைவாக நூலாசிரியர் கவிஞர் முனைவர் மு. காமராஜ் ஏற்புரை தந்து நன்றியுரையாற்றினார். தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் த.ராஜ்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தினர்.