சிவகங்கை: ஆகஸ்ட்:01
சிவகங்கை மாவட்டம்
தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர்
கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலக செயல்பாட்டில் இருக்கும் நூலக நண்பர்கள் திட்டமும் கலைமகள் ஓவியப் பயிற்சிப் பள்ளி நிர்வாகமும் இணைந்து விழா நடத்தியது.
இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் முனைவர் ப. நாகராஜன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டைகளையும் பயனுள்ள புத்தகங்களையும் வழங்கினார்.
இதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் எழுத்தாளர்
அ.ஈஸ்வரன் வாசிப்பின் அவசியம் மற்றும் நூலகத்தின் பயன்பாடு குறித்துப் பேசினார். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளர் ந. ரமேஷ்கண்ணன் நூலகத்தை பயன்படுத்தும் முறையும் வாழ்வில் வெற்றி பெறுவது பற்றியும் பேசினார்.
விழாவில் தமிழ் அறிஞர் ஞானபண்டிதன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் ஓவியப் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.