நாகர்கோவில், ஜூலை, 09,
கால்நடை பராமரிப்பு பால்வளம் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, 2023-ன் படி மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் 50% மானியத்துடன் கூடிய மின்சாரத்தில் இயங்கும் “புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 10 எண்ணம். குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, ரூ 1.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது.
ஒரு புல் நறுக்கும் கருவியின் விலை ரூ30750/- இதில் அரசு 50% மானியத் தொகையாக ரூ.15.375/- னை வழங்குகிறது. மீதமுள்ள 50% தொகையை மட்டுமே பயனாளிகள் செலுத்த வேண்டும்.
புல் நறுக்கும் கருவியானது தீவனப்பயிர்களை நுழைத்து. அதை சிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி சோளத்தட்டு, சீமைபுல், கோ-4. மக்காச்சோளம் போன்ற தீவணங்களை வேகமாக நறுக்கி கால்நடைகளுக்கு தேவையான ஊறுகாய் புல். போன்றவற்றை தயாரித்துக்கொள்ள முடியும். மேலும் இந்த கருவியானது தென்னை மட்டை மற்றும் தீவனங்களை மிக விரைவாகவும் வெட்டி தருகின்றது.
இந்த இயந்திரம் கைகளால் பயன்படுத்தும் வகையிலும், 2 குதிரைத் திறன் வரையிலும், மின்சார மோட்டரினால் இயங்கக்கூடிய வகையிலும் தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளதுஇந்த கருவியில் செங்குத்தாக வெட்டும் கத்தி உள்ளதால் அதிக அளவுள்ள தீவனங்களை விரைவாகவும், வேகமாகவும் வெட்டி விடும்.
இந்த கருவி தீவணத்தை மிகவும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கால் நடைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் கால் நடைகள் விரைவாக சாப்பிடுவதுடன் எளிதில் செரிமானமும் ஆகிவிடுகிறது. இந்த கருவியை பயன்படுத்தி தீவணங்கள் வீணாகமலும், சேதாரமா கமலும் வெட்ட முடியும், இக்கருவியை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 400 கிலோ வரை உள்ள தீவன பயிர்களை வெட்ட முடியும். இந்த கருவியை எந்த இடத்திற்கும் எடுத்து செல்லும் வகையில் குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தீவனத்தை வெட்டி கால்நடைகளுக்கு கொடுக்கும் போது பால் உற்பத்தியானது அதிகரிக்கும்.
08.07.2004 அன்று மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 – பயனாளிகருக்கு மின்விசையில் இயக்கும் புல் நறுக்கும் கருவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கால்கடை பராமரிப்புக் துறையை சேர்ந்த மண்டல இனை இயக்குநர் மரு. ஆர். ராதாகிருஷ்ணன், துணை இயக்குநர் மரு. அ.சந்திரசேகர் , உதவி இயக்குநர் மரு சி. சுப்பிரமனியன், கால்நடை உதவி மருத்துவர்கள் ஐ. அமுதவல்லி, ஜெ . லிடியா , சு. ரமேஷ், மு. இக்கிராஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு உகவியாளர்ன் கலந்து கொண்டனர்.



