தென் தாமரை குளம்., டிச. 7.
தென் தாமரைகுளம் எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கால்வின் தலைமை தாங்கினார், தென்தாமரை குளம் சி. எஸ். ஐ கஸ்பா சபை உதவி போதகர் அருள்சீலன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார், பள்ளி ஆசிரியை சாந்தி மார்கிரெட் அனைவரையும் வரவேற்று பேசினார், தலைமை ஆசிரியை பிறீத்தா ஆண்டறிக்கை வாசித்தார், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப்,எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெனிட்டா, கவுன்சிலர் எட்வின் ராஜ், அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லாநேவிஸ், அரசு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜில்லி ஆல்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி. டி.செல்வகுமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் கவனித்துவிட்டு சுமாராக படிக்கும் இடைப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாகிய நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். அவர்கள் மனம் தடுமாறாமல் பாதுகாப்பது ஆசிரியர் கையில் தான்உள்ளது. படிப்பவர்கள் மட்டுமல்ல இடைப்பட்ட மாணவர்களும் நம் குழந்தைகள்தான்.அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி பிரத்யேக பயிற்சியும் நல்லொழுக்கமும் கற்றுக் கொடுக்க வேண்டும். செல்போன், கஞ்சா,போதைகளிலிருந்து மாணவர்களை மீட்டு எடுக்க அவர்களோடு அன்பாக இணக்கமாக பழகுங்கள் அவர்களை அவமானப்படுத்தி தனிமை படுத்தாமல் பக்குவப்படுத்துங்கள். தெய்வங்களை யாரும் பார்த்ததில்லை குடும்பம், பிள்ளைகள், ஆசை, பாசத்தை துறந்து மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள் மண்ணில் நடமாடும் தெய்வங்கள், ஆசிரியர்களை தெய்வத்திற்கு மேலாக மாணவர்கள் மதிக்க வேண்டும்.,இப்போது மாணவர்கள் செல்போன் மோகத்தால் உடலை பேண மறுக்கிறார்கள், உணவு பற்றியும், உடற்பயிற்சி பற்றியும், வாழ்வியல் பற்றியும் நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள் . இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஆசிரியர் சைமன் சுந்தர் சிங் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் திமுக நிர்வாகி தாமரை பிரதாப், பொறுப்பாளர்கள் டேவிட் மோசஸ், பெனி ஜோசப், அருள், அனிதா, கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகி, தாணுலிங்கம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.