திருவள்ளூர் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம், பொத்தூர், மதுர உப்பராபாளையம் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரியசாற்றுமுறை, தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.