நாகர்கோவில் ஆக 23
தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்காடு, அருள்மிகு இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த புனித நீர் ஒட்டகத்தில் வைத்து ஊர்வலமாக திருக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. 21-08-2024 முதல் 23-08-2024 வரை மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகளுடன் ஆரம்பிக்கபடும் இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணகுமாரி, ஈசாந்திமங்கலம் ஊராட்சி கழக பொறுப்பாளர் சாஸ்தான்குட்டிபிள்ளை மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.