திருப்பூர் .மே:31
15 வேலம்பாளையம் அருகே எழுத்தாளர் மற்றும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் அழகு பாண்டி அரசப்பன் . ராமலட்சுமி ஆகியோரது புதல்வி
ஜெய் சாரதா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த அ.மேகா பிரியதர்ஷினி பள்ளி அளவில் 495 மார்க் எடுத்து முதலிடம் பிடித்தார். மாவட்டம் அளவில் நான்காவது இடம். மாநில அளவில் ஐந்தாவது இடம் பிடித்த மாணவிக்கு திருப்பூர் மாவட்ட தேவர் பேரவையின் தலைவர் சீனிவாசன் தேவர் மற்றும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி கே காளிமுத்து ஆகியோர் தலைமையில் அவரது இல்லத்திற்கு சென்று மாணவிக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர் மேலும் கல்வியில் பல்வேறு பட்டங்களை பெற்று வர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட தேவர் பேரவையின் பொதுச் செயலாளர் அகஸ்தியன் தேவர். செயலாளர் செந்தில் தேவர் . அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் தாமோதரன். துணைத் தலைவர் வெள்ளத்துரை. மாணவரணி பூமிநாதன். மற்றும் மாணவியின் சகோதரர் சித்த மருத்துவம் பயின்று வரும் தமிழரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.