நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் பெண் சலவைத்தொழிலாளி தவறவிட்ட ஏழாயிர ரூபாய் பணத்தை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவரது மனைவி சரஸ்வதி வயது(45) சலவை தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தன்னுடைய சுருக்குப்பையில் வைத்திருந்த ரூபாய் 7 ஆயிரம் பணத்தை வரும் வழியில் தரவரவிட்டு விட்டதாக கூறப்படுகிறது,இதனையடுத்து பதறியடித்துக் கொண்ட சரஸ்வதி பல இடங்களில் தேடியும் அக்கம்பக்த்தில் விசாரித்தும் கிடைக்காததால் பதறியடித்த அழுது புழம்பினார், இந்நிலையில் விளாம்பட்டி ஓடை தெருவை சேர்ந்த முத்துச்சாமி மகன் மகேஸ்வரன் வயது(50) என்பவர் ஓடைத்தெருவில் கீழே கிடந்த சுருக்கு பையை எடுத்து பார்த்தபோது அதில் பணம் ரூபாய் 7000 பணம் இருந்ததைக் கண்டு உடனடியாக விளாம்பட்டி காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் ஷர்மிளாவிடம் ஒப்படைத்தார், இதனையடுத்து விசாரணை
செய்த காவல் ஆய்வாளர் அந்த பணம் சரஸ்வதி என்பவருடையது என தெரியவந்ததையடுத்த சரஸ்வதியை காவல் நிலையம் அழைத்து மகேஸ்வரன் முன்னிலையில் சரஸ்வதியிடம் ஒப்படைத்தார்..
மேலும் மகேஸ்வரனின் நற்செயலை பாராட்டி காவல் ஆய்வாளர் அவர்கள் மகேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி வாழ்த்தி நன்றி தெரிவித்தார்.