தலைமை காவலருக்கு பாராட்டு தேனி மாவட்டம், செப்- 3 தேனி மாவட்டம், கம்பம் இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை நடத்திய நினைவு பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. தங்க தமிழ்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. என். இராமகிருஷ்ணன் கம்பம் நகர் மன்றத் தலைவர் திருமதி. வனிதா நெப்போலியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் இந்நிகழ்வில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மருத்துவ உதவித்தொகை மற்றும் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து தென்கொரியாவில் ஆசியன் பசிபிக் கேம்ஸ் 2023 போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற திருமிகு. மாரியப்பன் தலைமை காவலருக்கு சிறப்பு விருந்தினரான பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன் நினைவு பரிசினை வழங்கி பாராட்டியதுடன் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என உற்சாகப்படுத்தினார் அதனை தொடர்ந்து பேசிய தலைமை காவலர் மாரியப்பன் இவ்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த கம்பம் இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளைக்கு நன்றியினை தெரியப்படுத்தினார் இந்நிகழ்வுக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்



