மதுரை டிசம்பர் 17,
மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள். பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் உடன் உள்ளனர்.