ஈரோடு, அக். 15 –
கொங்குநாடு மக்கள் தேசிய மாநில பொருளாளரும் கொங்கு கலைக்குழு தலைவருமான கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டு உள்ளது.
இவர் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஆடும் ஒயில் கும்மியில் வள்ளி- முருகன் கதை பாடலாக பாடப்படுவதால் வள்ளி கும்மி என அழைக்கப்படுகிறது. அல்லி அர்ஜூனா கதையை பாடினால் பவளக்கொடி கும்மி. காத்தவராயன் கதையை கூறினால் காத்தவராயன் கும்மி என கதையை பொறுத்து கும்மியின் பெயர் மாறும். மதுரை வீரன் கதையை எங்களிடம் கொடுத்தால் பாடலாக மாற்றி கும்மியாட்டம் ஆட தயாராக இருக்கிறோம்.
இந்த கலையில் அனைத்து சமுதாயத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒயில்கும்மி என்ற வள்ளிக்கும்மியை அடுத்த தலைமு றைக்கும் கொண்டு செல்லும் வகையில் கல்லூரி பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது வேளாளர் பெண்கள் கல்லூரியில் இந்த கலை சொல்லி கொடுக்கப் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர் கோவிந்த ராஜ், கவுன்சிலர் குமாரவேல் ஆகியோர் கே.கே.சி.பாலுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.



