வேலூர் மாவட்டம் ,கே .வி குப்பம். வட்டம், கீழ்முட்டுக்கூர் கிராமம் ,மாடு விடும் வீதியில் நடைபெற்ற கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் ,தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், சிரசு ஊர்வலமும், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மேட்டுக்குடி எம். மகேந்திரன் ,திமுக ஒன்றிய கவுன்சிலர் வேலு, எல் .என்.புரம் பார்த்திபன் ,சேகர் நாயக்கர் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



