மார்த்தாண்டம், டிச. 26 –
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பளுகல் பேரூராட்சி, மத்தம்பாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் கட்டிடம் இல்லை என்பதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள், அப்பகுதி பொதுமக்கள் விளவங்கோடு எம்எல்ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்ற தாரகை கத்பட் எம் எல் ஏ முயற்சியின் பேரில் அமிர்த் திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடியில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தற்போது நிறைவடைந்தது. இந்த கட்டிடத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் தாரகை கத்பட் எம்எல்ஏ கலந்துகொண்டு அரசு பள்ளி புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பளுகல் காங்கிரஸ் தலைவர் ராபின்சன், முன்னாள் ஊராட்சி தலைவர் பிஜு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



