மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி லட்சதீபம் ஏற்றப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை உற்சவத் திருவிழாவையொட்டி, வருகிற நவ. 15-ஆம் தேதி பாலதீபம் ஏற்றப்பட்டு, மறுநாள் நவ. 16-ஆம் தேதி கார்த்திகை லட்சதீபம் ஏற்றப்பட்டு, அன்றைய தினம் சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோயில் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனையின் பேரில்
பாலதீபம் ஏற்றுதல், லட்ச தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி ஆகியவைகளுக்கான கார்த்திகை உற்சவத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலதீபம் 15.11.2024ம் தேதிக்கு பதிலாக 12.12.2024 அன்று நடைபெறும் என்றும், மேலும் திருக்கார்த்திகை லட்சதீபம் ஏற்றும் நிகழ்வும் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் 18.11:2024-க்கு பதிலாக 3.12.2024 அன்று நடைபெறும் என்பதை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கார்த்திகைத் திருவிழா நவ. 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவ. 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்படி உற்சவம் 10 நாட்களும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், 13.12.2024 திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை 7 மணியளவில் அருள்மிரு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்கள். மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். எனவே உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கீரிடம் ஆகிய விசேடங்கள் எதுவும் நடைபெறாது என்ற விபரம் கோவில் நிர்வாகம் அறிக்கையில்
இணை ஆணையர் செயல் அலுவலர்.
ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.