களியக்காவிளை, ஜன. 5 –
செங்கல் சிவ பார்வதி கோயிலில் நடக்கும் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா நடந்தது.
களியக்காவிளை அருகே உதியன் குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இவ்வருட சிவராத்திரி திருவிழா பிப்ரவரி 2-ம் தேதி துவங்கி 15-ம் தேதி தேதி நிறைவடைகிறது. அத்துடன் ஏழாவது அதிருத்திர மஹா யாகம் பிப்ரவரி 3ம் தேதி துவங்கி 13ம் தேதி நிறைவடைகிறது.
கேரளா மாநிலத்தில் தொடர்ந்து ஏழாவது தடவையாக அதிருத்திர யாகம் நடப்பது செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஆகும். முறையாக நடைபெறும் ஏழாவது அதிருத்ர மஹாயஜ்ஞத்திற்கும், முன்னோடியாக சமுக விழாவான கால்நாட்டு விழா கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி கணபதிஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தினார். கோயில் மேல்சாந்தி குமார் விழாக்களுக்கு தலைமை வகித்தார்.
விழாவில் செங்கல் பஞ்சாயத்து தலைவர் சோமராஜ், உறுப்பினர் லிஜு, பாஜக தென் மாவட்ட தலைவர் மூக்கம்பாலம்மூட் பைஜி, பாதுகாப்பு அதிகாரி துளசீதாசன் நாயர், வக்கீல் ஜெயசந்திரன், கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



