நாகர்கோவில், நவம்பர் 28 –
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 3-12-2025 புதன் அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
3-12-2025 அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 6-12-2025 அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின்படி 3-12-2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இவ்வாறு கூறியுள்ளார்.



